துடியலூர் போலீஸ் நிலைய பின்புறம் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் பஸ் நிறுத்தம் வரை தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. வாரச்சந்தை, அரசு ஆஸ்பத்திரி, மின் மயானம், தினசரி மார்க்கெட் உள்ளிட்டவை இருக்கும் பகுதி என்பதால் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும். ஆனால் தெருவிளக்குகள் ஒளிராமல் கிடப்பதால், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இருட்டை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு தெருவிளக்குகளை மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.