சேலம் 4 ரோடு பெரமனூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகம் முன்பு மின் கம்பம் ஆபத்தான நிலையில் சாய்ந்தபடி காணப்படுகிறது. இந்த கம்பத்தின் கீழ் பகுதியில் கல் ஒன்றை வைத்து முட்டு கொடுத்துள்ளனர். மேலும் கம்பத்தில் இருந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கொண்டே இருக்கிறது. பலத்த காற்று அடித்தால் இந்த மின்கம்பம் விழுந்துவிடும். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சந்துரு, பெரமனூர்.