ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2025-06-22 12:07 GMT

துடியலூரில் மேட்டுப்பாளையம் சாலை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள மேம்பாலம் மற்றும் அதை ஒட்டி பகுதியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரவில் தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் அரங்கேறுகிறது. இருட்டை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது. எனவே தெருவிளக்குகளை முறையாக பராமரித்து தொடர்ந்து இரவில் ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்