சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் வழியில் நான்கு ரோடு அருகே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்குகள் சில எரிவதில்லை. இதனால் போதுமான வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள், பாலத்தின் கீழ் பகுதி வழியாக செல்லும் பாதசாரிகள் அந்த வழியாக செல்ல சிரமப்படுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இருளில் மூழ்கும் மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் முன்வருவார்களா?
-ஆகாஷ், பெரமனூர்.