ஓமலூரில் இருந்து சேலம் குரங்குச்சாவடி செல்லும் வழியில் கரும்பாலை மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தினால் தடுப்புச்சுவர் இரவு நேரங்களில் தெளிவாக தெரிவதில்லை. இரவு நேரத்தில் ஒரு சிலர் தடுப்பு சுவரில் மோதி விபத்திற்கு உள்ளாகின்றனர். இந்த இடத்தில் போதுமான மின் விளக்குகள், எச்சரிக்கை ஒளிரும் விளக்குகள் அமைத்து தர வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
-ராமசாமி, சேலம்.