பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக மின்வாரிய அலுவலகம் திறக்கப்பட்டது. மின்வாரிய அலுவலகம் திறக்கப்பட்டு பல மாதங்களான நிலையில் பொதுமக்களுக்கு பயனளிக்காமலும், பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க கூட்டங்கள் மற்றும் முகாம்கள் எதுவும் நடத்தப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பயன்பாட்டில் இருந்தும், இல்லாத மின்வாரிய அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.