போதுமான மின்விளக்குகள் அமைக்க வேண்டும்

Update: 2026-03-01 12:55 GMT

அரியலூர் மாவட்டம் அம்மாக்குளம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளி, கோவில் உள்ளிட்டவையும் உள்ளன. இந்த நிலையில், அம்மாக்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் போதுமான அளவில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பலரும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், சாலையில் உள்ள பள்ளங்கள், வேகத்தடைகள் தெரியாமல் அதில் வாகனங்களை விட்டு விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்