சென்னை துரைப்பாக்கம் ராஜ் நகர் 2-வது தெருவில் சில வாரத்திற்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. அப்போது சாலை ஓரத்தில் மின்சார பெட்டி வைத்து சாலை போடப்பட்டது. மேலும் மின்பெட்டியில் இருந்து வரும் மின்வயர்கள் சாலையில் கிடக்கின்றன. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். குழந்தைகளும் சாயைில் நடந்து செல்வதால் பெற்றோர்கள் பயத்துடனே இருக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராடசி துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.