சாணார்பட்டி அருகே ராமன்செட்டிப்பட்டி காலனி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகே சாலையோர மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, கட்டிட கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்து, ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.