கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் பிரிவில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காந்திபுரம், உக்கடம் செல்வதற்கு பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களிலும், அதிகாலையிலும் அங்கு வந்து செல்லும் பயணிகள் அச்சப்படுகிறார்கள். மேலும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.