திருப்பூர் நெசவாளர் காலனியில் மரக்கிளைகளுக்கு இடையில் மின்வயர்கள் செல்கிறது. இதனால் காற்று வீசும்போது மின்தடை ஏற்படுகிறது. இப்படி வயர்களில் மரக்கிளை உரசுவதால் மின்விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.