பர்கூர் தாலுகா மல்லப்பாடி, சின்ன மல்லப்பாடி கூட்ரோட்டில் உயர்மின் கோபுர விளக்கு உள்ளது. இந்த உயர்மின் கோபுர விளக்கில் 2 விளக்குகள் மட்டுமே கடந்த ஒரு ஆண்டாக பயன்பாட்டில் உள்ளது. மீதம் உள்ள 2 விளக்குகள் எரிவதில்லை. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் வெளிச்சம் குறைவாக உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வெளிச்சமின்மை காரணமாக மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தனபால், பர்கூர்.