மின்விளக்குகள் இல்லாத சாலை

Update: 2024-08-11 16:59 GMT

பர்கூர் அருகே அம்மேரி என்ற இடத்தில் கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தின் கீழ்புறத்தில் உள்ள குகை வழிபாதையாக 500-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும், 20-க்கும் மேற்பட்ட பஸ்களும், பள்ளி வாகனங்களும் சென்று வருகின்றன. மேம்பாலத்தின் குகைவழி பாதையில் உள்ள மின் விளக்குகள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் எரிவதில்லை. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் தாமதமின்றி மேம்பாலத்தின் குகைவழி பாதையில் மின்விளக்குகள் அமைத்து அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தினேஷ், பர்கூர்.

மேலும் செய்திகள்