எரியாத மின்விளக்குகள்

Update: 2024-07-21 17:53 GMT

 சூளகிரி பஸ் நிலையம் எதிரில் பிரதான உயர்மட்ட மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலை வழியாக தான் உத்தனப்பள்ளி, ஓசூர் மற்றும் பிற ஊர்களுக்கு வாகனங்கள் செல்கின்றன. இந்த மேம்பாலத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மாதத்தில் பெரும்பாலான நாட்களில் இந்த விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. எனவே மேம்பாலம் அமைந்துள்ள பகுதிகளில் மின்விளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முனிராஜ், உத்தனப்பள்ளி.

மேலும் செய்திகள்