மின்கம்பத்தை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2024-06-30 09:55 GMT

திருப்பூர் கணக்கம்பாளையம் மீனாட்சி நகர் பகுதியில் அண்ணமார் கோவில் எதிரே சலையோரம் உள்ள மின்கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்து உள்ளது. இதனால் மழைக்காலங்கள் மற்றும் காற்று வீசி மின்சாரம் பழுது ஏற்பட வாய்ப்புள்ளது. இதை மின்சாரவாரிய ஊழியர்கள் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்