பகலிலும் எரியும் தெருவிளக்குகள்

Update: 2024-05-05 17:42 GMT


பல்லடம் அருகே உள்ள தெற்குபாளையம் பிரிவில் பெரும்பாலான இடங்களில் பகல் நேரங்களில் தெருவிளக்குகள் வீணாக எரிந்து கொண்டே இருக்கிறது. பகலில் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு மேல் எரியும் இந்த தெருவிளக்குகளால், மின்சாரம் வீணாவதுடன், அரசின் நிதியும் தேவையில்லாமல் வீணடிக்கப்படுகிறது. மேலும் பகல் நேரத்தில் தொடர்ந்து தெரு விளக்குகள் எரிவதால், பல்புகள் அடிக்கடி பழுது ஏற்பட்டு, மீண்டும் இரவு நேரத்தில் எரிய வேண்டிய தெருவிளக்குகள்எரியாமல், இருள் சூழ்ந்து குற்றசெயல்களுக்கு வழிவகுக்கிறது. எனவே பகலில் தேவையில்லாமல் தெரு விளக்குகள் எரியாமல், உரிய நேரத்தில் விளக்குகளை பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.


மேலும் செய்திகள்