ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2024-03-17 12:29 GMT

பந்தலூர் தாலுகா நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-1) எழுபதெட்டு ஏரியா லைன்சில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான தெருவிளக்குகள் ஒளிராமல் கிடக்கிறது. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து கிடக்கிறது. மேலும் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்குள்ள தெருவிளக்குகளை மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்