ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2024-02-04 12:04 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பெருங்கரை, பூதாளக்குன்னு ஆகிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் கிடக்கின்றன. இதனால் இரவில் அந்த பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. அதோடு காட்டுயானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் இரவில் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படும் நிலை இருக்கிறது. எனவே அந்த தெருவிளக்குகளை சரி செய்து, மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்