ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2024-01-28 12:13 GMT

பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-2) பாலவாடி லைன்ஸ் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி, வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் காட்டுயானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. ஆனால், அங்குள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் கிடக்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் இரவு நேரத்தில் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். வனவிலங்குகள் வீட்டுக்கு அருகில் வந்தால் கூட கவனிக்க முடியவில்ைல. எனவே தெருவிளக்குகளை பழுது நீக்கி மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்