ஒளிராத மின் விளக்குகள்

Update: 2024-01-07 11:48 GMT

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம், கவுண்டம்பாளையத்தில் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள ‘தமிழ் வாழ்க’ என்ற பெயர் பலகையில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக ஒளிராமல் கிடக்கிறது. இதனால் இரவு நேரத்தில் அந்த கட்டிடமே பொலிவிழந்து காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, மீண்டும் மின் விளக்குகள் ஒளிர ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்