எரியாத மின்விளக்குகள்

Update: 2023-12-03 16:51 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ரெயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள உயர் கோபுர மின்விளக்குகள் சமீபகாலமாக சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் ரெயிலை விட்டு இறங்கி வரும் பயணிகள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் சாலையின் இருபுறமும் புதர்கள் மண்டி கிடப்பதால் பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. எனவே இரவு நேரங்கள் முழுவதும் மின்விளக்கு எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கிஷோர், தர்மபுரி.

மேலும் செய்திகள்