மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2023-10-08 17:23 GMT

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்- நாமக்கல் செல்லும் சாலையில் நல்லியாம்பாளையம் உள்ளது. இ்ங்கு அருந்ததியர் காலணியில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் செல்லும் போது அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பழனிவேல், நாமக்கல்.

மேலும் செய்திகள்