ஏற்காடு வைத்தாத்தானூர் பகுதியில் உள்ள வீடுகளின் மீது மின்கம்பி தாழ்வாக செல்கிறது. இதனால் பலத்த காற்று வீசும்போது அவ்வப்போது தீப்பொறி ஏற்படுவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். மேலும் மின் கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு இதனை விரைந்து சரிசெய்ய வேண்டும்.