சேதமடைந்த மின்பெட்டி

Update: 2023-10-08 17:21 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து பாலப்பட்டி செல்லும் வழியில் மணப்பள்ளி ஈஸ்வரன் கோவில் அருகில் மின்பெட்டி உள்ளது. இந்த மின்பெட்டி தற்போது சேதமைடந்து உள்ளது. இதனால் மழை பெய்தால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த மின்பெட்டியை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சின்னப்பன், பாலப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்