ஆரணி சைதாப்பேட்டை நேரு நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் உயர் மின்னழுத்த கம்பிகள் தாழ்வாக உள்ளன. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அச்சமாக உள்ளது. தாழ்வாக இருக்கும் மின் கம்பிகளை சற்று உயர்த்தி கட்ட மின்வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குணசேகர், ஆரணி.