உயர் கோபுர மின் விளக்குகள் எரியவில்லை

Update: 2023-01-22 16:42 GMT

கண்ணமங்கலம் புதுப்பேட்டை காட்டுக்காநல்லூர், கொளத்தூர் சாலைகள் பிரியும் சந்திப்பில் ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.5 லட்சத்தில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணி நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை அடிப்படையில் மின் விளக்குகளை எரிய விட்டனர். தற்போது உயர் கோபுர மின் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது. எனவே கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியில் உயர் கோபுர மின் கம்பத்தில் மின் விளக்குகளை ஒளிர விட வேண்டும்.

-சுப்பிரமணியம், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்