திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் குரிசிலாப்பட்டு பயணிகள் நிழற்கூட பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு உள்ளது. இந்த உயர்கோபுர மின் விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் பயனற்ற நிலையில் உள்ளது. இதனால், அங்கு இரவில் வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். உயர்கோபுர மின்விளக்கை எரியவிட சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜான்பீட்டர், திருப்பத்தூர்.