
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தீப நகர் மேற்குப் பகுதியில் பிரதான சாலையின் நடுவே ஒரு மின் கம்பம் உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், பள்ளி வேன், பஸ், கனரக வாகனங்களுக்குச் சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
-பாஸ்கரன், திருவண்ணாமலை.