சாலையின் நடுவே மின்கம்பம்

Update: 2024-03-24 17:22 GMT

திருப்பத்தூர் அருகே ஜோதிமங்கலம் என்.எம்.கோவில் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பேவர் பிளாக் சாலை போடப்பட்டது. அந்தச் சாலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றாமல் அப்படியே வைத்து சாலை அமைத்துள்ளனர். இதனால் சாலையில் பெரிய வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. இரவில் வரும் வாகன ஓட்டிகள் மின்கம்பத்தில் மோதி காயம் அடைகின்றனர். எனவே சாலை நடுவே இருக்கும் மின்கம்பத்தை ஓரமாக அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமாரசாமி, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்