கால்வாய் நடுவே மின்கம்பம்

Update: 2022-09-26 11:21 GMT

களம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் சந்து தெருவில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கழிவுநீர் கால்வாயுடன் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. கால்வாய் மட்டும் அமைத்துள்ளனர். அந்தக் கால்வாயில் ஒரு மின்கம்பத்தை நடுவே வைத்து கட்டி உள்ளனர். இதனால் கழிவுநீர் ஓட சிரமமாக உள்ளது. சாலையும் இன்னும் போடவில்லை. கழிவுநீர் கால்வாயில் உள்ள கம்பத்தை ஓரமாக ஒதுக்கி நட வேண்டும். இல்லையேல், கழிவுநீர் கால்வாயை ஒதுக்கி கட்ட வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள சாலை பணியை உடனடியாக போட வேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராகவன், களம்பூர்.

மேலும் செய்திகள்