பாலத்தில் மின் விளக்கு வசதி தேவை

Update: 2022-09-14 13:41 GMT

கலவை அல்லாச்சேரி செல்லும் சாலையில் மடுவாங்கரை அருகே 4 வருடத்துக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் பாலம் அமைத்தனர். அந்தப் பாலத்தில் மின் விளக்கு அமைக்கவில்லை. அந்தப் பாலத்தின் அருகே இரவில் பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே பாலத்தின் மேலே மின்விளக்கு அமைக்க வேண்டும்.

-கணேஷ்செட்டியார், கலவை. 

மேலும் செய்திகள்