தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2026-06-14 13:47 GMT

சூலூர் தாலுகா கலங்கல் அருகே தேஜஸ் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. இங்கு மின்கம்பங்கள் நடப்பட்டு உள்ளன. ஆனால் தெருவிளக்கு வசதி இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதுபோன்று தார்சாலை வசதியும் இல்லை. இதனால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் தெருவிளக்கு, தார்சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க உடனடியாக அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்