ஆபத்தான மின் கம்பம்

Update: 2023-06-07 17:10 GMT

ஆபத்தான மின் கம்பம்

குடிமங்கலம் ஒன்றியம் பொட்டையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மின் கம்பத்தை சுற்றி கொடி படர்ந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்படும் நிலை உள்ளது. கொடி அதிக அளவு படர்ந்து உள்ளதால் மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டால் மின் வாரியத்தினர் சரி செய்வதற்காக அதில் ஏறமுடியாத நிலை உள்ளது. எனவே மின் கம்பத்தை சுற்றி படர்ந்துள்ள கொடியை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சிவக்குமார், குடிமங்கலம்.

மேலும் செய்திகள்