பழுதடைந்த ஒளிரும் மின் விளக்குகள்

Update: 2024-03-31 16:54 GMT

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கம் பஸ் நிறுத்தம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் எச்சரிக்கை விளக்கு கடந்த சில நாட்களாக பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதன் காரணமாக நெடுஞ்சாலைகளில் வளைவான பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கை விளக்கு இல்லாததால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் மாற்றுப் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மயில்வாகனன், காவேரிப்பாக்கம்.

மேலும் செய்திகள்