எரியாத உயர்கோபுர மின் விளக்கு

Update: 2023-02-15 16:58 GMT
எரியாத உயர்கோபுர மின் விளக்கு
  • whatsapp icon

பேரணாம்பட்டு பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள உயர்கோபுர மின்விளக்கு பல மாதங்களாக எரியவில்லை. இரவில் பஸ் நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பனி பொழிவும் இருப்பதால் அருகில் உள்ள பயணிகள், வந்து செல்லும் பஸ்கள் சரியாக தெரியவில்லை. இருட்டை பயன்படுத்தி திருட்டுச் சம்பவங்கள், போதைப்பொருள் விற்பனை நடக்க வாய்ப்புள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எரியாத மின்விளக்கை எரியவிட வேண்டும்.

-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்