கூடுதல் கவுண்ட்டர் அமைக்க வேண்டும்

Update: 2023-02-15 16:52 GMT

ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் பெரும்பாலான பகுதிகள் காலி இடமாக இருந்து வருகிறது. இப்பகுதியில் முள் செடிகள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு விஷ பூச்சிகள் அதிகளவில் உலாவி வருகின்றன. மேலும் மின் கட்டணம் செலுத்த மின்வாரிய அலுவலகத்துக்கு வந்தால் அங்கு ஒரே ஒரு கவுண்ட்டரில் மக்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே மின்வாரிய அலுவலகத்தில் கூடுதல் கவுண்ட்டர்கள் அமைக்க வேண்டும்.

-வெங்கடாசலம், ஆரணி. 

மேலும் செய்திகள்