பகலிலும் எரியும் தெரு மின் விளக்கு

Update: 2022-10-02 12:58 GMT

கீழ்பென்னாத்தூர் தாலுகா சிறுநாத்தூரை அடுத்த கார்ணாம்பூண்டி காமராஜ் நகர் பகுதியில் 24 மணி நேரமும் மின்கம்பத்தில் மின்விளக்கு எரிந்தபடி உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக மின்சாரத்தை வீணடிக்கின்றனர். இது குறித்து மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பகல் நேரத்தில் எரியும் தெரு மின்விளக்குகளை கண்காணித்து அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பிரபா, கீழ்பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்