தெருவிளக்குகள் ஒளிருமா?

Update: 2022-07-30 12:49 GMT

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை காட்டெருமை, காட்டுப்பன்றிகள், முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஆகும். இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் அனைத்தும் பழுதடைந்து ஒளிராமல் உள்ளதால் பொதுமக்கள் இரவில் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. எனவே தெருவிளக்குகளை முறையாக பராமரித்து ஒளிர செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்