கம்பத்தோடு உரசும் மின்கம்பிகள்

Update: 2022-07-29 12:15 GMT
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் அரசினர் மாணவர் விடுதிக்கு எதிர்ப்புறம் உள்ள சிமெண்டு சாலையோரத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் மின்கம்பியானது கம்பத்தோடு உரசி கொண்டு உள்ளது. தற்போது மழை பெய்யும் நேரங்களில் மின்கசிவு ஏற்படுகிறது. வீதியில் உள்ள சிமெண்டு சாலையில் மழை பெய்யும் நேரங்களில் மின் கசிவு உருவாகி வீதியில் நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே உயிரிழப்பு ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்