எரியாத மின்விளக்கு

Update: 2023-07-30 17:44 GMT

சேலம் மாவட்டம் எருமாபாளையம் ஊராட்சி டாக்டர் எம்.ஜி.ஆர். கலையரங்கம் அருகில் உயர் கோபுர மின்விளக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எரியவில்லை. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே எரியாத இந்த மின்விளக்கை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கஸ்தூரி, எருமாபாளையம், சேலம்.

மேலும் செய்திகள்