எரியாத மின்விளக்குகள்

Update: 2023-03-19 17:06 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா முத்தம்பட்டி போஸ்ட் கண்காணிப்பட்டியில் உள்ள தெருக்களில் கடந்த 2 மாதங்களாக தொடர்ச்சியாக 4 மின்விளக்குகள் எரியவில்லை. இந்த பகுதியில் பொது மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். திருட்டு பயமும் அதிகமாகி உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எரியாத மின்விளக்குகளை எரிய செய்ய வேண்டும்.

-இளவரசன், ஓமலூர், சேலம்.

மேலும் செய்திகள்