வீடுகளுக்கு மின் இணைப்பு

Update: 2023-02-12 17:27 GMT

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அழகனூர் மேட்டுக்காட்டில் 100 வீடுகளும், தறி பட்டறைகளும் உள்ளன. இங்கு சுமார் 2 வருடங்களுக்கு முன்பு டிராஸ்ன்பார்மர் அமைக்கப்பட்டது. இதுவரை மின் கம்பம் அமைக்காததால் மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள், மேலும் திருட்டு அச்சமும் ஏற்படுகிறது. எனவே மின் கம்பம் அமைத்து உடனடியாக மின் இணைப்புகள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முருகன். அழகனூர், சேலம்.

மேலும் செய்திகள்