சேலம் அம்மாபேட்டை 33-வது வார்டு தம்பி காளியம்மன் தெருவில் மின்கம்பம் சேதமடைந்து கீழே விழுகிற நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் நடமாட பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரத்தினம் விஸ்வா, அம்மாபேட்டை, சேலம்.