மின்விளக்கு அமைக்க வேண்டும்

Update: 2022-10-09 17:47 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து மேட்டூர் செல்லும் நெடுஞ்சாலையில் தொளசம்பட்டி பிரிவில் அரசு பெண்கள் ஆதிதிராவிடர் நல விடுதி உள்ளது. இந்த விடுதியின் முன்பகுதி சாலையில் எந்தவொரு மின்விளக்கு வசதியும் இல்லை. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. இரவு நேரங்களில் மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். எனவே அப்பகுதியில் மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாஸ்கர், தாரமங்கலம், சேலம்.

மேலும் செய்திகள்