குண்டும் குழியுமான சாலை

Update: 2022-11-13 11:27 GMT

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இதன் அருகே குறிஞ்சி நகருக்குச் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலையை குறிஞ்சி நகர் மக்கள் மட்டுமின்றி கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்தச் சாலை மிகவும் குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது. இருசக்கர வாகனங்களில் செல்ேவாா் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. குறிப்பாக இரவில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. விரைவில் அங்கு தாா் சாலை அமைக்க வேண்டும்.

-ஆல்பா்ட், வேலூா்.

மேலும் செய்திகள்