Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Jun 2023 11:48 AM GMT
Palvannan | நாகப்பட்டினம்
#33820

வாய்க்கால் தூர்வாரப்படுமா?

தண்ணீர்

நாகை மாவட்டம் திட்டச்சேரி பச்சாந்தோப்பு பகுதியில் கிளி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் முறையான பராமரிப்பின்றி தூர்வாரப்படாமல் உள்ளது. இதன்காரணமாக அதன் மூலம் பாசன வசதி பெறும் விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 11:38 AM GMT
Palvannan | திருவாரூர்
#32571

ஆபத்தான பாதாள சாக்கடை மூடிகள்

சாலை

திருவாரூர் துர்க்காலயா சாலையின் நடுவே பாதாள சாக்கடை குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை மூடுவதற்காக போடப்பட்டுள்ள மூடிகள் சாலையின் மட்டத்தில் இருந்து உயரமாக அமைந்துள்ளன. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் அந்த மூடிகளால் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை மூடிகளை சாலை மட்டத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 11:01 AM GMT
Palvannan | மயிலாடுதுறை
#32566

போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

போக்குவரத்து

மயிலாடுதுறை மாவட்டம் கோணிக்கரை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் கால்நடைகள் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதன்காரணமாக அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 11:11 AM GMT
Palvannan | தஞ்சாவூர்
#32161

நூலகம் பராமரிக்கப்படுமா?

மற்றவை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் கட்டையங்காட்டில் நூலகம் ஒன்று உள்ளது. இந்த நூலகம் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக நூலகத்தில் உள்ள புத்தகங்கள் கரையான்களுக்கு இரையாக கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நூலகத்துக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்பட்ட அதிகாரிகள் நூலகத்தை முறையாக பராமரிக்கவும், புத்தகங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 11:09 AM GMT
Palvannan | மயிலாடுதுறை
#32155

வடிகால் வசதி வேண்டும்

கழிவுநீர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி மேல்நிலைப்பள்ளி அருகே ஆஞ்சநேயர் கோவில் தெரு உள்ளது. இங்கு முறையான வடிகால் வசதி இல்லை. இதன்காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 10:26 AM GMT
Palvannan | திருவாரூர்
#31747

குண்டும்,குழியுமான சாலை

சாலை

திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடியில் இருந்து பொன்னேரி வழியாக அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருபவர்களும் குண்டும்,குழியுமான சாலையினால் அவதிக்குள்ளாகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் மழைநீரும் தேங்கி நின்று பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தரவேண்டும் என்பதே பொதுமக்களின்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 12:18 PM GMT
Palvannan | நாகப்பட்டினம்
#31335

நாய்கள் தொல்லை

மற்றவை

நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் ஊராட்சி பகுதி முழுவதும் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள, வாகன ஓட்டிகள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 11:04 AM GMT
Palvannan | திருவாரூர்
#29658

குண்டும்,குழியுமான சாலை

சாலை

திருவாரூர் மாவட்டம் மாவூரில் இருந்து உமாமகேஸ்வரபுரம் வழியாக சுரக்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்குகிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 11:03 AM GMT
Palvannan | திருவாரூர்
#29657

மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

மின்சாரம்

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சி தெங்கால்காலனி சாலையோரத்தில் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடக்கூடிய சூழல் நிலவுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 10:19 AM GMT
Palvannan | தஞ்சாவூர்
#28771

தரமற்ற புதிய தார்சாலை

தரமற்ற புதிய தார்சாலைசாலை

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் வெண்டையம்பட்டி, மனையேரிபட்டிக்கு செல்வதற்காக புதிதாக உய்யகுண்டான் கட்டளை வாய்க்கால் அருகே தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை போடப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வருகின்றன. மேலும், சாலையும் ஆங்காங்கே உள்வாங்கி காணப்படுவதால் சாலை தரமற்று காணப்படுவதாக கூறுகின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சாலையில் பயணம் செய்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை தரமான முறையில் அமைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 11:24 AM GMT
Palvannan | தஞ்சாவூர்
#27935

குரங்குகள் அட்டகாசம்

மற்றவை

தஞ்சை சீனிவாசபுரம், ரெட்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் கூட்டமாக அங்கும்,இங்கும் ஓடி செல்கின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றனர். இவற்றால் பொதுமக்கள்,குழந்தைகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Feb 2023 1:49 PM GMT
Palvannan | திருவாரூர்
#27100

குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர்

திருவாரூரை அடுத்த திருவாதிரைமங்கலம் ஊராட்சியில் சூரனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் முறையான குடிநீர் வசதி இல்லை. இதன்காரணமாக அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கைப்பம்பு, குடிநீர் குழாய்களிலும் முறையாக தண்ணீர் வருவதில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடை காலம் நெருங்கி வருவதால் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் மக்களுக்கு முறையான குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick