24 Sep 2023 11:23 AM GMT
#40379
மின்விளக்கு வசதி வேண்டும்
நாகை
தெரிவித்தவர்: Palvannan
நாகை மாவட்டம் கட்டுமாவடி ஆலத்தூர் இடையிலான சாலையில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இருள் சூழ்ந்து கிடப்பதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?