Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 July 2026 2:13 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#66013

சாலையின் நடுவே மின்கம்பம்

சாலை

தஞ்சை தேவி நகர் வடக்கு பூக்கொல்லை சாலை நடுவே மின்கம்பம் உள்ளது. ஏற்கனவே சாலை குறுகளாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் அந்த பகுதியை கடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே சாலை நடுவே போக்குவரத்துக்கு இடையூராக உள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்தவேண்டும். பொதுமக்கள், தேவிநகர், தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2026 2:11 PM GMT
Mr. Raja | கும்பகோணம்
#66011

புதர்மண்டிக்கிடக்கும் ஆறு

புதர்மண்டிக்கிடக்கும் ஆறுதண்ணீர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் - நீடாமங்கலம் சாலை திப்பிராஜபுரத்தில்உள்ள திருமலை ராஜன் ஆற்றில் நாணல்களும், புதர்களும் மண்டி கிடக்கிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்டால் இந்த ஆற்றில் சீராக தண்ணீர் செல்லாது. குறிப்பாக இதை நம்பியுள்ள கடைமடைக்கு முறையாக பாசனத்துக்கு தண்ணீர் சென்றடையாத நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட நீர் வளத்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக திருமலைராஜன் ஆற்றை ஆக்கிரமித்துள்ள புதர்கள், நாணல்செடி, கொடிகளை தூர்வார வேண்டும். பொதுமக்கள், திப்பிராஜபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2026 2:14 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#65847

போக்குவரத்துக்கு இடையூறாக கம்பி

சாலை

பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நுழைவுவாயில் அருகே சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக கம்பி ஒன்று உள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. அந்த பகுதியை கடந்து செல்லும் மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் உள்ள கம்பியை அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்கள், பட்டுக்கோட்டை. ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2026 2:12 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#65846

பூங்காக்கள் சீரமைக்கப்படுமா?

பூங்கா

தஞ்சாவூர் தாலுகா பிள்ளையார்பட்டி தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்பு பகுதியில் உள்ள பூங்காக்களில் செடி, கொடி, குப்பைகள் மண்டி கிடக்கின்றன. இதனால் அங்கு பாம்பு உள்ளிட்ட விஷசந்துக்கள் அச்சுறுத்தல்கள் அதிகரித்து உள்ளது. இதனால் பூங்காக்களுக்கு செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பூங்காக்களை சீரமைத்து தர வேண்டும். பொதுமக்கள், பிள்ளையார்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2026 2:10 PM GMT
Mr. Raja | ஒரத்தநாடு
#65845

ஆபத்தான சாலை

சாலை

ஆபத்தான சாலை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கருக்காடிபட்டி செல்லும் சாலை வெள்ளாளம்மன் கோவில் அருகே உள்ள பாலத்தில் சாலை குண்டும், குழியுமாக ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும். பொதுமக்கள், கருக்காடிபட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2026 3:33 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#65703

பழுதான குடிநீர் குழாய்

தண்ணீர்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் சிவன் கோவில் தெருவில் உள்ள குடிநீர் குழாயை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். தற்போது குழாய் உடைப்பை சரி செய்யாததால் தண்ணீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்து தர வேண்டும். பொதுமக்கள், செம்பனார்கோவில். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2026 3:32 PM GMT
Mr. Raja | கீழ்வேளூர்
#65702

குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகர கொந்தகை அருகே வாழ்மங்கலம் கிராமத்தில் நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால் பெண்கள், முதியவர்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் தண்ணீருக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சீரான குடிநீர் வழங்க வேண்டும். அதுவரை டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், வாழ்மங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2026 3:30 PM GMT
Mr. Raja | சீர்காழி
#65701

குண்டும், குழியுமான சாலை

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் பிரதான சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். தொடர் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக குண்டும், குழியுமான சாலையில் சீரமைத்து தர சீர்காழி நகராட்சி நடவடிக்கை எடுக்குமா ? வாகன ஓட்டிகள், சீர்காழி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2026 3:27 PM GMT
Mr. Raja | கும்பகோணம்
#65700

மின்விளக்குகள் ஒளிருமா ?

மின்சாரம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருவிடைமருதூர் அருகே புத்தகரம் ஊராட்சி முருக்கன்குடி முதல் நெடார் வரை 1 கிலோமீட்டர் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் மின்கம்பங்கள் இருந்தும் மின்விளக்குகள் சரியாக எரிவது இல்லை. அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் இருளில் சூழ்ந்து கிடக்கிறது. இரவில் விஷசந்துக்களால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். முருக்கன் குடி முதல் நெடார் வரை உள்ள சாலை மின் கம்பத்தில் மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், முருக்கன்குடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2026 12:03 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#65458

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

பட்டுக்கோட்டை பாளையம் மேலத்தெரு மாதுரார் காலனியில் சேதமடைந்த மின்கம்பம் ஒன்று உள்ளது. சிமெண்டு காரைகள் பெயர்ந்து காட்சியளிக்கும் மின்கம்பம், எப்போது வேண்டுமானாலும், சரிந்து விழும் என்கிற ஆபத்தான நிலையில் உள்ளது. குடியிருப்பு பகுதி என்பதால், ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிதாக அமைத்து தரவேண்டும். பொதுமக்கள், பட்டுக்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2026 12:00 PM GMT
Mr. Raja | சீர்காழி
#65455

உயர்கோபுர மின்விளக்குகள் ஒளிருமா ?

மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அஞ்சாறு வார்த்தலையில் விக்ரமன் ஆற்று பாலம் உள்ளது. இந்த இடத்தில் உயர் கோபுர மின் விளக்குகள் சில நாட்களாக சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே உரிய பராமரிப்பு செய்து உயர் கோபுர மின் விளக்குகளை முறையாக எரியவைக்க வேண்டும். பொதுமக்கள், குத்தாலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2026 11:57 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#65453

குண்டும், குழியுமான சாலை

சாலை

தஞ்சை புதிய பஸ் நிலையத்திலிருந்து பெட்ரோல் பங்க் வழியாக ஆர்.ஆர்.நகர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள், கனரக வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் அந்த வழியாக கடந்து செல்ல சிரமப்படுகின்றன. மேலும் இருட்டில் பள்ளம் இருப்பது தெரியாமல் சிறுசிறு விபத்து நடக்கிறது. இந்த பள்ளங்கள் பல மாதங்களாக உள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick