குப்பைகளை அகற்றுவார்களா?

Update: 2022-12-18 11:00 GMT

கே.வி.குப்பத்ைத அடுத்த சந்தைமேடு பகுதியில் குடியாத்தம் நோக்கி செல்லும் பயணிகளுக்கான நிழற்குடை, தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ளது. அருகில் குப்பைத் தொட்டியும் உள்ளது. இங்கு காய்கறி கழிவுகள், மக்கும், மக்கா குப்பைகள், மாமிச கழிவுகளை கொட்டி வருகின்றனர். இங்கு நாய்களும், காக்கைகளும் தின்றதுபோக மீதியை விட்டுச் செல்கின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத நிழற்குடையாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடை முன்பு கிடக்கும் குப்பைகளை அகற்றி பயணிகளுக்கு வசதியை செய்து தர வேண்டும்.

-தாமோதரன், ேக.வி.குப்பம்.

மேலும் செய்திகள்