வேகத் தடைகளில் பிரதிபளிப்பான்கள் பொருத்துவார்களா?

Update: 2023-06-04 13:24 GMT

திருவண்ணாமலை ஈசான்யம் எமலிங்கத்தில் இருந்து ஒரு பள்ளிக்கூடம் வரை சாலையில் 2 வேகத் தடைகள் உள்ளன. சாலையோர மர நிழலில் சற்று வேகமாக வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களுக்கு அந்த வேகத் தடைகள் சரியாக தெரிவது இல்லை. இரவில் வருவோருக்கும் அந்த வேகத் தடைகள் சரியாக தெரியவில்லை. அந்த வேகத்தடைகளில் ஒளிரும் வர்ணம் பூச வேண்டும் அல்லது பிரதிபளிப்பான்கள் பொருத்தி நன்றாக வேகத் தடைகள் தெரியும்படி செய்ய வேண்டும். விபத்துகள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

-என்.சின்னத்துரை, திருவண்ணாமலை. 

மேலும் செய்திகள்